(18) எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”
தேவனோடு நாம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவு, நம்மை நன்றி உணர்வுள்ள வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும்.
1 யோவான் 4:19
(19) அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
ரோமர் 3:21-24
(21) இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.
(22) அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
(23) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
(24) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
நாம் எவ்வாறு நீதிமான்கள் ஆக்கப்பட்டுள்ளோம்?
எதைக் குறித்து நன்றி உணர்வோடு உள்ளீர்கள்?
(6) ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே,
(7) அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
எவ்வாறு நாம் தேவனோடு தனிப்பட்ட உறவில் வாழ முடியும்?
நன்றி உணர்வு என்பது நாம் தேர்ந்து கொள்வது
சங்கீதம் 118:1
(1) கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 100:4
(4) அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
ஆலயத்திலும், நாம் செல்லும் மற்ற இடங்களிலும் எவ்வாறு நுழைய வேண்டும்?
நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இது எத்தகைய மாற்றத்தை உருவாகும்?
ஓர் புதிய வாழ்க்கை முறை
(11) பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
(12) அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
(13) இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
(14) அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
(15) அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
(16) அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
(17) அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே?
(18) தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
(19) அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
கிரேக்க மொழியில், சுத்தமாகுவதற்கும், ஆரோக்கியமாகுவதற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. “சுத்தமான” அனைவரும் உடலால் நலம்
அடைந்தவர்கள். “ஆரோக்கியமான” நபர் உடலால் மட்டுமல்ல ஆவியிலும், உணர்விலும் நலமடைந்தார்.
கிங் ஜேம்ஸ் வெர்ஷன் (King James Version-KJV) எனும் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘cleansed’ (சுத்தமாக்கப்பட்ட) மற்றும் ‘whole’ (முழுமையான) எனும் வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இயேசு, பத்து பேருக்கும் என்ன செய்தார்? ஏன்?
திரும்பி வந்த அந்த சமாரியன் பதிலின் தனித்துவம் என்ன?
என்ன ஆசீர்வாதங்களை அவர் பெற்றுக் கொண்டார்?
நண்பனிடம் கேள்
தேவன் உங்கள் வாழ்வில் செய்த எந்த காரியத்திற்காக நன்றியோடு உள்ளீர்கள்?
இந்த வாரம், எந்த சூழ்நிலையில் நன்றி உணர்வோடு உள்ளீர்கள்?
மாதிரி ஜெபம்
ஆண்டவரே, என் வாழ்வில் நீர் அளித்த ஆசீருக்காக நன்றி. எல்லா சூழ்நிலைகளிலும் நன்றியோடு இருக்க எனக்கு உதவும். நீர் எப்போதும் நல்லவராய் இருப்பதால், நான் எப்போதும் நன்றி நிறைந்த உள்ளதோடு இருக்க விரும்புகிறேன்.
வசனம்
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.