Attitude

தேவன் மீதான நமது அன்பையும் ஆர்வத்தையும் வெளிக்காட்டுதல்



தேவன் நம்மை முதலில் அன்பு செய்ததால், நாம் இப்போது அவரை அன்பு செய்கிறோம்.
நம்மை மன்னிக்கவும், நமக்கு புது வாழ்வை அளிக்கவும் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்; இவ்வாறே நம்மீது கொண்ட அன்பை அவர் நமக்கு வெளிப்படுத்தினார். (1 யோவான் 4:16, யோவான் 3:16)

 

தேவனை துதிப்பதும் ஆராதிப்பதும் நாம் அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே! இயேசுவைப் பற்றிய உண்மையையும், அவர் நம் வாழ்வில் செய்த காரியங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதும் கூட அன்பின் வெளிப்பாடு ஆகும். இவையே நமது வாழ்க்கை முறையாக மாற வேண்டும்.

எடுத்து சொல்லுதல்

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள நபர் நலமடைந்த பின் என்ன செய்தார்?

எப்படிப்பட்ட அபிப்ராயத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தினார்?

இயேசுவின் நற்செய்தியைக் குறித்து நமக்கு எந்த மாதிரியான மனநிலை இருக்க வேண்டும்?

வேத வார்த்தை என்ன செய்யும்?

ஆராதனை மற்றும் துதி

பின்வரும் வசனத்தை வாசித்து பதிலளியுங்கள். நாம் ஏன் ஆராதிக்கிறோம்? எவ்வாறு நாம் ஆராதிக்க வேண்டும்?

ஆர்வம் மிகுந்த வாழ்க்கை முறை

அ) முழு உடலோடு ஆராதிப்பது

பின்வரும் வசனத்தை வாசித்து பதிலளியுங்கள். நாம் எவ்வாறு முழு உடலோடு ஆராதிப்பது?

 

ஆ) தேவனுக்கு கீழ்ப்படிதல்

இயேசுவின் சீடர்களாகிய நாம் என்ன செய்ய அழைக்கப் பட்டுள்ளோம்?

இன்றைய வாழ்வில், இதை எவ்வாறு செய்வது?

நாம் எப்படி வாழ வேண்டும்?

நண்பரிடம் கேள்

எவ்வாறு நீங்கள் துதி, ஆராதனையையும், நற்செய்தியை எடுத்துச் சொல்லுவதையும் வாழ்வின் அங்கமாகக் கொண்டுள்ளீர்கள்?

வாழ்க்கை நடைமுறை

இயேசுவின் வாழ்க்கை மற்றும் அவரைப் பற்றிய உண்மையை, உங்களால் இந்த வாரம் யாருக்கு எடுத்துச் சொல்ல முடியும்?

அந்த நபரை சந்திந்து, உங்கள் வாழ்வில் தேவன் செய்யும் நற்செயல்களை எடுத்து சொல்ல நேரத்தை ஒதுக்குங்கள்.

மாதிரி ஜெபம்

அப்பா, நீர் எப்போதும் நல்லவர்; எங்களுடைய துதிக்கும் ஆராதனைக்கும் தகுதியானவர். உம்மைப் பற்றிய உண்மையை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் வகையில், என்னை பல்வேறு இடங்களில் வைத்துள்ளீர், நன்றி.

வசனம்

Study Topics