நாம் எதிலும் சிறப்பாக முடிக்க வேண்டுமென்றால், விடாமுயற்சி எனும் மனப்பான்மை நம் வாழ்வில் இருப்பது அவசியம். நாம் இருக்கும் சூழல் எதுவாய் இருந்தாலும்,
வெற்றி பெறுவோம் என்ற மனநிலை மிக முக்கியம்.
நாம் இலக்கை நோக்கியே இருந்தால், சிறப்பாக முடிப்போம் எனும் வெற்றியின் மனநிலை எப்போதும் இருக்கும்.
வெற்றியின் மனப்பான்மை
(62) அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
தேவனுடைய ராஜ்யதிற்கு ஊழியம் புரிய யார் தகுதி உள்ளவர்?
2 கொரிந்தியர் 8:11
(11) ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
பிலிப்பியர் 3:14
(14) கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
வெற்றியின் மனப்பான்மை எவ்வாறு இருக்கும்?
சிறப்பாய் முடிப்பதற்கு மூன்று முக்கிய காரியங்கள்
அ) தரிசனம் நிறைந்தவர்களாய் இருப்பது
(18) தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
நீங்கள் தரிசனம் இல்லாமல் இருக்கும் போது என்ன நடக்கிறது?
தரிசனம் நிறைந்த வாழ்க்கைக்கும், இல்லாத வாழ்க்கைக்கும் உள்ள வித்தியசம் என்ன?
ஆ) சரியாக உண்பதும் நன்கு ஓய்வு எடுத்தலும்
மத்தேயு 4:4
(4) அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
சங்கீதம் 23:2
(2) அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
நாம் தினந்தோறும் என்ன செய்ய வேண்டும்?
இதை எவ்வாறு நமது அனுதின நடைமுறையாக்குவது?
இ) மாற்று திட்டத்தை பற்றி சிந்திக்காதீர்கள்
(17) அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
முடிக்கும் போது எதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?
தேவனின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சேர்ந்து பணியாற்றுதல்
(18) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(19) ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
(20) இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
தேவனின் விருப்பம் என்ன?
உங்கள் வரங்களைக் கண்டுபிடித்து அதைப் பயன்படுத்துங்கள்.
எந்தந்த வரங்களில் நாம் சிறந்து விளங்க வேண்டும்?
உங்களுக்கு தேவன் அளித்த வரங்கள் என்னென்ன?
அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
நண்பரிடம் கேள்
எவ்வாறு தரிசனம் நிறந்து இருக்க முடியும்?
அதை சிறப்பாய் முடிக்க, எப்படி உங்களை அர்ப்பணிக்கிறீர்கள்?
வாழ்க்கை நடைமுறை
உங்கள் சபையில் எதேனும் ஒரு ஊழியத்தில் பணியாற்றுகிறீர்களா?
உங்கள் வரங்களைக் கொண்டு எவ்வாறு அந்த ஊழியத்தை கட்டி எழுப்ப முடியும்?
மாதிரி ஜெபம்
எதையும் சிறப்பாய் முடிக்கும் வண்ணமாய், நல்ல மனப்பான்மையை எனக்கு தாரும். எப்போதும் உமது விருப்பத்தை என் நினைவில் கொள்ள உதவும், அதனால் எல்லாச் சூழலிலும் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்றுவேன்.
வசனம்
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.