Attitude

தாராளமாய் வாழ்தல்



லூக்கா 6:38-ல் “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்”, என்று கூறப்பட்டுள்ளது. நாம் தாராளமாய் நமது நேரத்தையும், பணத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தி மற்றவர்களை ஆசிர்வதிக்கும் போது, நாம் தேவ ஆசிர்வாதத்தின் கதவுகளைத் திறக்கிறோம். தாராள மனப்பான்மை வெறும் உணர்வு அல்ல, அது உள்ளத்தின் வெளிப்பாடு. தேவன் தன் ஒரே மகன் இயேசுவை நமக்காக சாவிற்கு கையளித்த போது, அவர் அதை மனப்பூர்வமாய்ச் செய்தார். கொடுப்பது என்பது மனப்பான்மை மட்டுமல்ல, அது வாழ்க்கை முறையும் கூட.

கொடுப்பது அன்பின் வெளிப்பாடு

எவ்வாறு தேவன் தமது தாராள குணத்தை நமக்குக் காட்டினார்?

இயேசுவின் மனப்பான்மை எவ்வாறு இருந்தது?

நாமும், கொடுக்கும்பொழுது எப்படிப் பட்ட மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்?

தாராளமாய் வாழ்வதின் ஆசீர்வாதங்கள்

தாராளமாய் வாழ்தலின் பயன் என்ன?

தேவன் நமக்களித்த ஆசீர்வாதத்திலிருந்து எவ்வாறு நாம் தாராளமாய் வாழ்வது?

எதிலும் தாராளமாய் இருத்தல்

தாராளமாய் வாழ்தலின் பயன் என்ன?

நண்பரிடம் கேள்

நீங்கள் தாராள மனதோடு இருக்க உந்து சக்தியாக இருப்பது எது?

தாராளமாய் இருப்பதை உண்மையிலேயே மகிழ்ந்து, விரும்புகிறீர்களா?

ஆம் என்றால், ஏன்? இல்லை என்றால், ஏன் இல்லை?

உங்கள் தாராள குணத்தையோ அல்லது யாரேனும் அவர்களுடைய தாராள மணப்பான்மையின் பொருட்டு உங்களை ஆசீர்வதித்திருந்தால் அந்த சாட்சியை இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம்.

வாழ்க்கை நடைமுறை

எவ்வாறு தாராளமான வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்வது?

ஒருவேளை, தாராள குறைச்சலின் காரணத்தால், உங்கள் வாழ்வில் ஆசீர்வாதத்தை குறைத்துக் கொள்வதாக உணர்கிறீர்களா? அப்படியென்றால் அது என்ன?

மாதிரி ஜெபம்

அப்பா, உமது ஒரே மகனை எனக்காக தந்ததற்காக நன்றி. பணத்தையும், நேரத்தையும், ஆற்றலையும் தாராளமாய் செலவு செய்ய எனக்கு கற்றுத் தரும்.

குறிப்பு வசனம்

Study Topics