பாலியல் உறவு என்பது மிக ஆற்றல் வாய்ந்தது, எனவே தேவன் பாலியல் பாலியல் ஒழுக்கக் கேடைக் குறித்து எச்சரிக்கிறார்.
(15) உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
(16) வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
(17) அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
(18) வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
(19) உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
(20) கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இந்த பாலியல் ஒழுக்க கேட்டை “போர்நியோஸ்” (Porneos) என்ற சொல்லாடலால் குறிப்பிட்டுள்ளார்கள். போர்நியோஸ் என்பது திருமணத்திற்கு அப்பாற் பட்டு நாம் ஈடுபடும் எல்லா பாலியல் செயல்பாடுகளைக் குறிக்கும். இருவரை ஒரே உடலாய் ஒன்றினையச் செய்யும் ஆற்றல் பாலியல் உறவிற்கு உள்ளதென இவ்வசனம் கூறுகிறது. இவ் உறவு, இருவருக்கு இடையில் நெருக்கத்தை உண்டாக்குகிறது; எனவே தான் அதை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதனாலேயே தேவன், நாம் திருமணத்தில் இணைக்கப் பட்ட நமது துணையோடு மட்டும் இவ்வுறவைக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்.
1 தீமோத்தேயு 1:9-11
(9) எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய் தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,
(10) வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
(11) நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.
ரோமர் 13:9-10
(9) எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
(10) அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
1 யோவான் 5:3
(3) நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
கற்பணைகள் மற்றும் நியாயப் பிரமாணம் எல்லாமும் எதற்காக? எவ்வாறு நாம் தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?
ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து பாலியல் உறவில் ஈடுபடுவதே பாலியல் ஒழுக்கக் கேடு ஆகும்
நீதிமொழிகள் 6:26-35
(26) வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
(27) தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
(28) தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
(29) பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
(30) திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
(31) அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
(32) ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
(33) வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
(34) ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
(35) அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
எபிரெயர் 13:4
(4) விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
ஏன் பாலியல் ஒழுக்கக் கேடு தவறு?
அதன் விளைவு என்ன?
(19) மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
(20) விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்.
(21) பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(20)
Why, my son, be intoxicated with another man’s wife? என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
(21) மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
(22) துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
(23) அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
(18) வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
பாலியல் ஒழுக்க கேட்டின் விளைவுகள்.
– கடுமையான, நிரந்தரமான பாலியல் தொற்று நோய்கள் வழியாக உடலால் உங்களுக்கும், அடுத்தவருக்கு துன்பம் ஏற்படுத்துதல். உதாரணத்திற்கு கிளாமைடியா என்கிற நோய் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். அதே போல கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது.
(11) முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து…
– முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளால், யாரையும் நம்பவோ அன்பு செய்யவோ முடியாமல் போகுதல்.
– தேவையற்ற கர்ப்பம் தரித்தல் அதை கருச் சிதைவு செய்தல் (கருச் சிதைவு கருப்பை வாய் புற்றநோய் உண்டாக்கும்)
– குற்ற உணர்வு & வெட்கம்
பாலியல் குறித்த தவறான எண்ணங்கள்.
– “காம விகாரமும், பாலியல் ரீதியில் பார்ப்பதும் தவறில்லை” என்ற தவறான எண்ணம் (மத்தேயு 5:28)
(28) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
– “எதையும் ஏற்றுக் கொள்ளலாம்” என்கிற (பொறுப்பற்ற) தவறான மனப்பான்மை (நீதிமொழிகள் 15:10)
(10) வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
– “நிதர்சன வாழ்க்கையில் இருந்து தப்பிக்க பாலுறவு கொள்ளலாம்” என்ற தவறான எண்ணம் (detachment) (நீதிமொழிகள் 14:27)
(27) கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
– “இதைத் தானே எல்லாரும் செய்கிறார்கள்?” என்ற தவறான மனநிலை (ரோமர் 12:2)
(2) நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
– “வாகனங்கள் வாங்குமுன் test drive செய்வதில்லையா? அது போல தான்” என்கிற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 26:18-19)
(18) கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
(19) அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
– இவரை/இவளை தானே திருமணம் செய்து கொள்ள போகிறேன், எனவே திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளலாம்” என்ற தவறான எண்ணம்
(15) உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு,
– “ஒருவேளை, திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவிற்கு மறுத்தால் என்னுடைய வாழ்க்கைத் துணை என்னை நிராகரிக்க கூடும்” என்ற தவறான எண்ணம். (நீதிமொழிகள் 11:22)
(22) மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.
– “கன்னித் தன்மையை விட்டுக்கொடுப்பது சரி” என்ற தவறான எண்ணம். (நீதிமொழிகள் 16:17)
(17) தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
– “செல்வதிற்காக, பொருளுக்காக, வசதிக்காக உறவு கொள்ளுதல் சரி” என்ற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 5:16-18)
(16) உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
(17) அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.
(18) உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
– “நான் அப்படி தான், நான் இதற்கு அடிமை” என்ற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 15:10)
(10) வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
– “இருவரும் இணைந்து வெளியில் சுற்றினோம்; அவள் விரும்பினாள், எனவே இதுவும் நடந்து விட்டது” என்கிற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 14:22)
(22) தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
(12) எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். (13) வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.
(13)
You say, “Food for the stomach and the stomach for food, and God will destroy them both.”
The body, however, is not meant for sexual immorality but for the Lord, and the Lord for the body.
ஏன் தேவன் நமது உடலைக் குறித்து அக்கறை கொள்கிறார்?
மேலே கூறப்பட்டுள்ளவைகளை காணும் போது, தேவன் நமது உடலைக் காத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் இன்று வளர்ந்த சமுதாயத்தில் இவ்வுறவின் மீதுள்ள ஆர்வமும், முயற்சி செய்துவிட வேண்டும் என்கிற அழுத்தமும் உள்ளதை மறுக்க முடியாது. வாழ்வின் பிந்தைய நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு திருமணத்தையும், பாலுறவைவும் தேவன் படைத்த விதத்தை அறியாமல் இருந்திருக்கிறார்கள் . பல இளைஞர் இளம்பெண்கள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் தவறில்லை என்ற எண்ணமுடையவர்களாக இருந்துள்ளார்கள். ஒருவேளை இது உங்களுக்கும் பொருந்தலாம். திருமணத்தின் கொடையை, அதற்கு முன்பே உடைத்தற்காக வருந்தலாம். ஒருவேளை நீங்கள் எடுத்த தவறான முடிவுகள், எண்ணங்களால் தற்போது திருமணத்தைக் குறித்து பயத்தோடு இருக்கலாம் அல்லது அதை அருவருப்பாக எண்ணலாம்.
1 கொரிந்தியர் 6:9-11
(9) அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
(10) திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
(11) உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.
2 கொரிந்தியர் 5:17
(17) இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
ரோமர் 8:1-4
(1) ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
(2) கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
(3) அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
(4) மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
நீங்கள் ஏற்கனவே தவறு செய்திருந்தால், என்ன செய்யலாம்?
(குறிப்பு: நீங்கள் ஒருவேளை பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டிருந்தால், அது உங்கள் தவறில்லை! ஆனால், தேவனிடம் உங்களை தூய்மைப் படுத்த மன்றாடலாம். இவ்வாறு செய்வதால், நீங்கள் மனதார நம்பும் (சபை ஊழியர்) தலைவரிடம் மனம் விட்டு பேச உதவியாய் இருக்கும்)
தேவனின் தூய்மை
எவ்வாறு தேவன் நம்மை மீண்டும் தூய்மை ஆக்குகிறார்?
(18) வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
(9) நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
(17) இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
நண்பனிடம் கேள்
உங்களைப் பொறுத்த வரை இச்சை அடக்கம் எவ்வளவு முக்கியமானது? ஏன்?
வாழ்க்கை நடைமுறை
உடல் தூய்மையோடு இருக்க எப்போதாவது தேவனின் உதவியை நாடி உள்ளீர்களா?
உடல் தூய்மையை எவ்வாறு உங்கள் வாழ்வில் முக்கியப் படுத்துவது?
மாதிரி ஜெபம்
ஆண்டவரே, பாலுறவு என்ற கொடைக்காக நன்றி! இக்கொடையை திருமணம் வரை பாதுகாத்துக் கொள்ள எனக்கு உதவும். என்னையும், என் எண்ணங் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்; உம்முடைய வழிகளில் வாழ எனக்கு உதவும்.
வசனம்
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.