நம் கண்களால் காண முடியாதவை நிகழும் என்ற பரிசுத்த ஆவியானவரின் அறிவுறுத்தலே நம்பிக்கையாகும். வேதம் இவ்வாறு கூறுகிறது:
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.”
இந்த வெளிப்பாடு, வாழ்வில் செயல்பாடோடு தொடர்கிறது. நம்பிக்கை என்பது ஒரு செயல்பாட்டு வார்த்தை; அதுவே நாம் இயேசுவின் மீது கொண்டுள்ள விசுவாசத்தின் அடித்தளம் ஆகும்.
“விசுவாசத்தின் தந்தை”
வேதம் ஆபிரகாமை “விசுவாசத்தின் தந்தை” என அழைக்கிறது. தனது மனைவி குழந்தைப் பேறு இல்லாதவராய் இருந்தும், இனி அதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்தாலும், தேவன் தன்னை “பல நாடுகளுக்கு தந்தை ஆக்குவேன்” என்று வாக்களித்ததை நம்பி, பெற்றுக் கொண்டார். தேவன் அருளிய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று உறுதியாகவும் இருந்தார்.
ஆபிரகாம் நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! அவருடைய நம்பிக்கையைக் குறித்து ரோமர் 4:13-21ல் வாசிக்கலாம்.
(13) அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
(14) நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும்.
(15) மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை.
(16) ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
(17) அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய் மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
(18) உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
(19) அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
(20) தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,
(21)தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
ரோமர் 4:13
(13) அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
ரோமர் 4:18
(18) உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
அவர் எவ்வாறு இந்த வாக்குத்தத்தை பெற்றுக் கொண்டார்?
(19) அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
ஆபிரகாம், சாராவின் உடல்நிலை எவ்வாறு இருந்தது?
(19) அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
(20) தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,
(21)தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
எவ்வாறு ஆபிரகாம் தனது உடல்நிலை குறித்த உண்மைகளுக்கு பதிலளித்தார்?
இந்நிகழ்விலிருந்து நம்பிக்கை குறித்து நாம் கற்றுக் கொள்வது என்ன?
நம்பிக்கை குறித்து..
(17) ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
எவ்வாறு நம்பிக்கையை பெற்றுக் கொள்கிறோம்?
(8) கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
(9)ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
எவ்வாறு நாம் மீட்பை பெற்றுக் கொள்ள முடியும்?
(11) நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
நீதிமான் எதனால் வாழ்கிறார்?
(6) ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
(7) நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.
நமது நம்பிக்கையை எவ்வாறு உறுதிப்படுத்தலாம்?
யோவான் 10:37-38
(37) என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.
(38) செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்
யோவான் 14:11-12
(11) நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
(12) மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
பெரிய காரியங்களும், அரும் அடையாளங்களும் நமது பிதாவிற்கு மகிமை அளிக்கவும், நமது நம்பிக்கையை அதிகப் படுத்தவும் உதவுகிறது. நீங்கள் கண்ட எந்த அரும் அடையாளங்கள் உங்கள் நம்பிக்கையை வளர்க்க உதவிற்று?
(18) ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
நம்பிக்கையோடு எதுவும் சேர்ந்து இருத்தல் வேண்டும்?
(2) என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
(3) உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
(4) நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.
நம்பிக்கையில் வரும் சோதனை எதை உருவாக்கும்?
நண்பரிடம் கேள்
(35) ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்
(36) நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
(37) வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
(38) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
(39) நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
வேதத்திலிருந்து தேவன் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தையோ அல்லது வாக்குத்தத்தமோ அளித்துள்ளாரா?
(36) நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
தேவனின் வாக்குத்தத்ததை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கை நடைமுறை
எவ்வாறு எனது நம்பிக்கையை அதிகப்படுத்த முடியும்?
மாதிரி ஜெபம்
இயேசுவே, உமது வார்த்தை உண்மையுள்ளது, எனவே நன்றி! உமது ஆற்றலால் நீர் எனக்கு அளித்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என நம்பி அதை உறுதியாக பிடித்துக் கொள்கிறேன்.
வசனம்
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
போதகர் ராட் அவர்களின் கற்பித்தலை யூடுயூபில் இங்கு காணலாம்.